தென்காசியில் கூட்டுறவுத்துறை சார்பில் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் கூட்டுறவுத்துறை சார்பில் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் கூட்டுறவுத்துறை சார்பில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம், தென்காசி கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், தென்காசி கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் இளநிலை ஆய்வாளர் பதவி உயர்வில் மண்டலம் விட்டு மண்டலம் வழங்குவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜ் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மாடசாமி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story