புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டம் 

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் பொன்ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.இதில் நிர்வாகிகள், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

Tags

Next Story