சங்கரன்கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடல் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள் வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் உதவித்தொகையை வழங்கிட வலியுறுத்தி, திருவேங்கடம் தாலுகா புலியூர்,வெங்கடாசலபுரம் கிராமத்திற்கு பகுதி நேர நியாய விலை கடையை அமைத்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் சீதாராமன் குருவிகளும் ஒன்றிய செயலாளர் சுவாமிதாஸ் சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் கருத்த பாண்டியன் மேல நீலிங்கநல்லூர் ஒன்றிய செயலாளர் அமுல்ராஜ் உள்ளிட்ட ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story