திருச்சியில் காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்

பிஜேபியை சேர்ந்த எம்.பி அனந்த் குமார் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி எஸ்.டி சார்பில் பிஜேபியை சேர்ந்த எம்.பி அனந்த் குமார் நாங்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றவுடன் அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைப்போம் என்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி துறை மாநகர் மாவட்ட தலைவர்,

பிரேம்,தெற்கு மாவட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமையில் ஜங்ஷன் ராஜீவ்காந்தி உருவசிலை அருகில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல்லூர் சுரேஷ், காங்கிரஸ் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், சேவாதள பிரிவு மாநில பொதுச்செயலாளர் அப்துல் குத்தூஸ், மற்றும் பலர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story