தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 2 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட கருவூலம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழக அரசு ஊழியர்களின் நலன் கருதி புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தியதாகவும் இந்த திட்டத்தின் மூலம் ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து வருவதாகவும் இதன் மூலம் இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம் என கூறியதாகவும் ஆனால் மருத்துவம் பார்க்க செல்லும் பொழுது அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை சிகிச்சைக்கான கட்டணத்தை வழங்கி வருவதாகவும் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஊதியத்தில் வரி பிடித்தம் தாமதமாக செய்து வருவதாகவும் இதை முறைப்படுத்தி பழைய நடைமுறை கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story