மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பத்திரம் மூலம் நிதி வழங்கியவர் பட்டியலை வெளியிட திருக்குவளையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பத்திரம் மூலம் நிதி வழங்கியவர் பட்டியலை வெளியிட திருக்குவளையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு முழு தவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தேர்தல் பத்திரம் மூலம் நிதி வழங்கியவர் பட்டியலை வெளியிடக் கோரி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை கடைவீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசு பிஜேபி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போவதை கண்டித்து, உடனடியாக தேர்தல் பத்திரம் மூலம் நிதி வழங்கியவர் பட்டியலை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் டவெங்கட்ராமன்(கீழையூர் மேற்கு, அப்துல் அஜீஸ்(கீழையூர் கிழக்கு), ராஜா(தலைஞாயிறு), மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அம்பிகாபதி, வேணு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். படவிளக்கம் படம் | உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தேர்தல் பத்திரம் மூலம் நிதி வழங்கியவர் பட்டியலை வெளியிடக் கோரி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை கடைவீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story