ராமநாதபுரம் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் அரண்மனை முன்பு பாஜக அரசை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் பாஜக அரசை கண்டித்து அரண்மனை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) மூலம் மதச்சார்பின்மையை சிதைத்து மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை தீவிரப்படுத்தி இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் பாசிச பாஜக அரசின் போக்கை கண்டித்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை( CAA) உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்கள் அற்புத குமார், பிரபாகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். விடுதலை சேகரன் முன்னிலை வகித்தார். சத்யராஜ் வளவன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story