கிராம தலையாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்




ராமநாதபுரத்தில் பதவி உயர்வு வழங்காததை கண்டித்து தலையாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரத்தில் பதவி உயர்வு வழங்காததை கண்டித்து தலையாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் முதுகுளத்தூர் வட்ட தலையாரிகள் சங்கம் சார்பில் பதவி உயர்வு வழங்காததைகண்டித்து மாவட்ட செயலாளர் சாமிநாதன் தலைமையில் முதுகுளத்துார் தாலுகா ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட தலைவர் முனியசாமி வட்ட செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டபொருளாளர் லிங்கவேல் அனைவரையும் வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் தகுதிபெற்ற தலையார்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பதவி வழங்காததைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். முடிவில் வட்ட தலைவர் முனியசாமி நன்றி கூறினார்.
Next Story




