வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

புகார் அளிக்க சென்ற புகார்தாரரை பல மணி நேரம் காக்க வைத்தும், புகார் அளிக்க சென்றவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாகவும் புகார் எழுந்தது. இதனை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் காவல் நிலையத்தில் சீதாலெட்சுமி என்பவர் இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரிடம் புகார் அளிக்க சென்ற புகார்தாரரை பல மணி நேரம் காக்க வைத்தும், புகார் அளிக்க சென்றவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாகவும் புகார் எழுந்தது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவருக்கு அவருக்கு ஆதரவாக சென்ற வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்தும், அதற்கு துணைபோகும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை கண்டித்தும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர். காவல்துறை அதிகாரியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story