மது,போதை பொருட்கள் விற்பனையை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

மது,போதை பொருட்கள் விற்பனையை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

நத்தம் பஸ் நிலைய ரவுண்டானா அருகே திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது.


நத்தம் பஸ் நிலைய ரவுண்டானா அருகே திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நத்தம் பஸ் நிலைய ரவுண்டானா அருகே அதிமுக சார்பில் மது,போதை பொருட்கள் விற்பனை பழக்க வழக்கத்தை முற்றிலும் அழிக்க கோரியும்,திமுக அரசை கண்டித்து செவ்வாய்க்கிழமை மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நத்தம் அதிமுக மாநில துணை பொது பொதுச் செயலாளரும் நத்தம் சட்டமன்ற உறுப்பினருமான இரா.விசுவநாதன் தலைமை தாங்கி கண்டன உரை நிகழ்த்தினார். இதில் 1000க்கும் மேற்பட்டோர் இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் 1 மணி நேரம் நடைபெற்றது. இந்த மனித சக்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஆண்களும், பெண்களும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கைகளை கோர்த்தவாறு நின்றிருந்தனர். திமுக ஆட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story