கண்மாய் நீரை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

கீழராஜகுலாராமன் பகுதியில் கண்மாய் நீரை திறக்கக்கோரி இணைந்து எம்.எல்.ஏ., ரகுராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் அருகே கம்மாபட்டி பகுதியில் பெரியகுளம் கண்மாயில் கண்மாய் முழு கொள்ளளவு எட்டி தண்ணீர் வெளியேறும் நிலையில் கண்மாய் மதகுகளை திறக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று கம்மாபட்டிக்கு பகுதிக்கு வந்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் பொதுமக்களுடன் சேர்ந்து அவரும் போராட்டத்தில் ஈடுபட்டார் கண்மாயில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுவதால் கண்மாய் மதகுகளை திறக்காமல் தலையாரி செல்வராஜ் செயல்படுவதாகவும் வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சட்டமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு வைத்தார். உடனடியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்களும் சட்டமன்ற உறுப்பினர் கலைந்து சென்றனர்.

Tags

Next Story