இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் பெரிய மணலி பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கோரிக்கையை வலியுறுத்தி எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் கே.சிவகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் கே.அன்புமணி, AITUC நாமக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் பி.தனசேகரன், மாவட்ட செயலாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் என்.செல்வராஜ், சி.முருகேசன் , ஆர்.கோபிநாத், எம்.செங்கோட்டுவேலு, கார்த்திக், யுவராஜ், நல்லமுத்து உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story