டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அனைத்து கட்சி சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.  

திருப்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அனைத்து கட்சி சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அனைத்து கட்சி சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனியில் உள்ள மதுபான கடையை அகற்றக்கோரி அனைத்து கட்சி சார்பில் மதுபான கடை முன்பு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு கொமதேக நிர்வாகி மாடிக்கோவில் செல்வக்குமார் தலைமை வகித்தார். கொமதேக மாநகர நிர்வாகி ரவி, சிபிஎம் வடக்கு மாநகர குழு உறுப்பினர் ராஜேந்திரன், அமமுக நிர்வாகி தங்கராஜ், தேமுதிக நிர்வாகி சுப்பிரமணி, தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகி ஞானவேல், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி ருக்குமணி, அதிமுக நிர்வாகி வெள்ளியங்கிரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாடத்தில் உடனடியாக டாஸ்மாக் கடையை மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story