தேங்காய்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம்

தேங்காய்களை கையில் ஏந்தி  ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் தேங்காய்களை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விழுப்புரத்தில் தேங்காய்களை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பாரத் கோகனெட் ஆயில் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் கடும் குளிரிலும் தொடர்ந்து போராடி வரும் இந்திய தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பாரத் கோகனெட் ஆயில் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் தமிழ் நாடு முழுவதும் நேற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந் திட்ட வளாகம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில கரும்பு விவசாய சங்க செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சந்திரபிரபு, மாவட்ட தலைவர் லோகநாதன், மாவட்ட அமைப்பு தலைவர் ரகோத்தமன், நிர்வாகிகள் ஏழுமலை, பிரகாஷ், அய்யனார் உள்பட பலர் தேங்காய்களை கையில் ஏந்தியபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags

Next Story