கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் ஆர்ப்பாட்டம்

கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

அரியலூர் மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்ட சிஐடியு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரிய, இணையதள சேவையகம் மழைநீரில் மூழ்கியதால் பல லட்சம் தொழிலாளர்களின் ஆவணங்கள் அழிந்து போயுள்ளதால், அதனை மீண்டும் பதிவேற்றம் செய்திட வேண்டும் என வலியுறுத்தபட்டது. மேலும் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள விண்ணப்பங்கள் அனைத்திற்கும் காலதாமதமின்றி பண பயன் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவிந்தா, கோவிந்தா கோஷமிட்டனர். இதில் அச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story