விழுப்புரம்: பத்து ரூபாய் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்:  பத்து ரூபாய் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பத்து ரூபாய் இயக்கத்தினர் ஆர்பாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி பத்து ரூபாய் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாஸ்கரன், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுச்செயலாளர் நல்வினை விஸ்வராஜூ, கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதில் நிர்வாகிகள் அசோக்குமார், முருகன், உயிரோவியன், டேவிட்குமார், அருண்பாண்டியன், வெங்கடேசன், பிரபு, ரமேஷ், சுதாகர், நீலமேகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story