விஜயகாந்த்க்கு ஈமச்சடங்கு நடத்திய தேமுதிவினர்.

மொட்டை அடித்து கொள்ளும் தேமுதிகவினர்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு, கரூர் புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில்,பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, கிருஷ்ணாபுரம் ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ், கதிர்வேல் தலைமையில் மாயனூர் சனா மண்டபத்தில் 11நாள் நிகழ்வாக கட்சி தொண்டர்கள், மொட்டை அடித்து ஈமச்சடங்கு நடைபெற்றது.
கரூர் புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் SPசிவம்ராஜேந்திரன் தலைமையில், தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் அவர்களின் திருவுருவப்படத்திற்குமலர் தூவி மரியாதை செலுத்தியும், இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட தலைமைக் கழகதொழிற்சங்க பேரவைத்தலைவர் பொன். இளங்கோகோவன், மாவட்ட கழக அவை தலைவர் ரெங்கநாதன், மாவட்ட கழகத் துணைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், தாமோதரன், கிருஷ்ணமூர்த்தி, ராஜலட்சுமி,மருதையா, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட அளவிலான முக்கிய பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.