தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்ட கழகம், ஆலோசனைக் கூட்டம்

தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்ட கழகம், ஆலோசனைக் கூட்டம்

தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்ட கழகம், ஆலோசனைக் கூட்டம்

தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்ட கழகம், ஆலோசனைக் கூட்டம் திருச்செங்கோடு தேமுதிக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்ட கழகம், ஆலோசனைக் கூட்டம் திருச்செங்கோடு தேமுதிக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்செங்கோடு கழக செயலாளர் குணசேகரன் வரவேற்று பேசினார், மாவட்ட கழக பொருளாளர் மகாலிங்கம், மாவட்ட கழக துணை செயலாளர்கள் சக்திவேல், பாலச்சந்திரன், குமாரபாளையம் பொறுப்பாளர் நாகராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட கழக செயலாளர் விஜய்சரவணன் அவர்கள் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தேமுதிக எந்த அணி உடன் கூட்டணி அமைக்கின்றதோ அவர்கள் தான் மாபெரும் வெற்றி பெறுவார்கள் என்றும், அதேபோல நாமக்கல் வடக்கு மாவட்டம் முழுவதும் கழக உட்கட்சி கட்டமைப்பு மிகவும் வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்றும், மேலும் மகளிர் அணி, இளைஞரணி, மாணவரணி, போன்ற அணி பொறுப்புகள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும், கட்சியில் புதியதாக நிறைய பேர் சேர்கிறார்கள் அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவது, பாராளுமன்றத் தேர்தலுக்கு தேமுதிக பூத் கமிட்டி ஆய்வு செய்வது என பேசினார், கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக மறைந்த கழக தலைவர் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, இந்த கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சேகர், மந்திரி, நகர கழக செயலாளர் பள்ளிபாளையம் வெள்ளியங்கிரி, ஒன்றிய கழக செயலாளர்கள் திருச்செங்கோடு வடக்கு நாகராஜ், தெற்கு தர்மன், எலச்சிபாளையம் சக்திவேல், மல்லசமுத்திரம் வினோத், வெண்ணந்தூர் கிழக்கு சுப்பிரமணி, இராசிபுரம் கிழக்கு பாலச்சந்தர், மேற்கு வேல்முருகன், நாமகிரிப்பேட்டை தமிழ்ச்செல்வன், பேரூர் கழக செயலாளர்கள் மல்லசமுத்திரம் வெங்கடாசலம், அத்தனூர் நாகராஜ், புதுப்பட்டி மூர்த்தி, படைவீடு சக்திவேல், மற்றும் திருச்செங்கோடு குட்டிஆறுமுகம், ரத்தினம், மல்லசமுத்திரம் சௌந்தரராஜன், இராசிபுரம் கோபால், ஆகாஷ்குமார், படைவீடு பிரதீப், என கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story