டெங்கு விழிப்புணர்வு

திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு சாலப்பாளையம் பகுதியிலும் 31வது வார்டு கொல்லப்பட்டி பகுதியிலும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .இந்த நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமை தாங்கினார். ஒவ்வொரு வீதியாக சென்று டெங்கு உற்பத்தியாக காரணமான கொசு புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது .திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ் பாபு உறுதி மொழியை வாசிக்க பொதுமக்கள் வழிமொழிந்தனர். சாணார்பாளையம், கொல்லப்பட்டி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளில் நகராட்சி பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக ஈடுபட்டனர்.

Tags

Next Story