டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

செங்கம் அருகே டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
செங்கம் அருகே தீத்தாண்டப்பட்டு கிராமத்தில்சுகாதாரத்துறை ஊராட்சி நிர்வாகம் இணைந்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் முருகன் வரவேற்றுப் பேசினார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் மாணவர்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கோஷமிட்டவாறு சென்றனர். பின்னர் சிறப்பாக பங்குபெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை பரிசளித்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story