டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார பரிசோதனை : சுகாதார ஆய்வாளர் அதிரடி

ஊத்தங்கரை பேரூராட்சியில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு கட்டிடங்கள் மற்றும் அனைத்து கடைகளிலும் டெங்கு தடுப்பு பணி மற்றும் உப்பு பரிசோதனை குடிநீர் பரிசோதனை சுகாதார சம்பந்தப்பட்ட அனைத்தும் ஆய்வு மேற்கொண்டனர், பொது சுகாதார சட்டம் 1939 விதியின்படி நோட்டீஸ் கொடுத்தல் மற்றும் பொது இடங்களில் புகை பிடித்தல் ஸ்பாட் ஃபைன் ஆகியவை சினிமா தியேட்டர் பஞ்சர் கடை வெளிப்பகுதியில் உள்ள டயர்கள் அவற்றில் நீர் அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டனர் இந்த நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் தமிழ் அன்பன் மற்றும் களப்பணியாளர்கள் வட்டார மருத்துவ அலுவலர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மருத்துவ அலுவலர் செயல் அலுவலர் மற்றும் வார்டு கவுன்சிலர் உடன் இருந்தனர்

Tags

Next Story