டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழிப்புணர்வு நிகழ்ச்சி
சுரண்டையில் நடந்த டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளாமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை நகராட்சி மற்றும் காமராஜர் அரசு கல்லூரி என்எஸ்எஸ் சார்பில் டெங்கு தடுப்பு மற்றும் தூய்மை பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் உறவின் முறை கமிட்டி நாட்டாமை தங்கையா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சின்னத்தாய், நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திட்ட அலுவலர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story