மஞ்சள் காமாலை நோயால் மன உளைச்சல் - எலக்ட்ரீசியன் தற்கொலை

மஞ்சள் காமாலை நோயால் மன உளைச்சல் - எலக்ட்ரீசியன் தற்கொலை

காளிதாஸ்

வெள்ளகோவிலில் தீராத மஞ்சள் காமாலை நோயால் மனமுடைந்த எலக்ட்ரீசியன் எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம் தோகைமலை கல்லுப்பட்டியை சேர்ந்த கண்ணையன் மகன் காளிதாஸ் (வயது 20). எலக்ட்ரீசியன். வெள்ளகோவில் சிவநாதபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான டெக்ஸ் டைல்ஸ் நூல் மில்லில் வேலை செய்து வந்தார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த காளிதாஸ் பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட காளிதாஸ் கடந்த 16-ந் தேதி எலி மருந்தை (விஷம் வாங்கி சாப்பிட்டு விட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனை யில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து கரூர். சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story