கல்வராயன்மலையில் 500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

சாராய ஊறல் 

கல்வராயன்மலையில் போலீசார் நடத்திய சோதனையில் 500 லிட்டர் சாராய ஊறல் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.
கல்வராயன்மலை பகுதியில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. எஸ்.பி., சமய்சிங் மீனா உத்தரவின் பேரில் கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் மலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். தேக்கம்பட்டு மேற்கு ஓடை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச சாராய ஊறல் போடப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 2 பேரல்களில் இருந்து 500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக கரியாலுார் போலீசார் வழக்கு பதிந்து, கள்ளச்சாராய வியாபாரி தலைமறைவான தேக்கப்பட்டு சேர்ந்த கோவிந்தன் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Tags

Next Story