குவைத் தீ விபத்தில் இறந்தவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் - சுப்பராயன் எம்.பி

குவைத் தீ விபத்தில் இறந்தவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் - சுப்பராயன் எம்.பி

 எம்.பி சுப்பராயன் 

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த,காயமடைந்த இந்தியர்களின் விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு திருப்பூர் எம். பி சுப்பராயன் கடிதம் எழுதியுள்ளார்.

குவைத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்தவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு திருப்பூர் தொகுதி எம். பி சுப்பராயன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தது துருதிஷ்டவசமானது. இந்த தீ விபத்து செய்தி கேட்டு நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்த நிலையில் குவைத்தில் இருக்கும் இந்தியர்களின் அச்சத்தைப் போக்க மத்திய அரசால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் மற்றும் விபத்தில் காயம் அடைந்தவர்களின் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். இந்தியர்களின் உடல்களை அந்தந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்க குவைத்தில் உள்ள தூதரகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அருகில் இருக்க விரும்பும் உறவினர்களின் பயணத்திற்கு மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story