வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த எம்.எல்.ஏ

வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த எம்.எல்.ஏ

எம்.எல்.ஏ செந்தில்குமார் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பணிகளை எம்.எல்.ஏ செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான கிளாவரை,கூக்கால்,பழம்புத்தூர், குண்டுப்பட்டி,பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம்,நியாய விலைக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் லட்சக்கணக்கான மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது, இந்த பணியை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்,

மேலும் இந்த‌ப்ப‌குதிக‌ளில் பாலம்,தார் சாலைகள் உள்ளிட்ட பணிகளுக்கும் பூமி பூஜைகள் செய்து பணியை துவக்கி வைத்தார், இதனை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் உள்ள மாணவர்களிடம் அங்குள்ள‌ குறைகளை கேட்டறிந்தார்,மேலும் மலைக்கிராம மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர் இந்நிகழ்வில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story