வளர்ச்சி திட்ட பணிகள் - எம்.எல்.ஏ துவக்கி வைப்பு

கணபதிபாளையம் ஊராட்சி, பொங்கலூர் ஊராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.
திருப்பூர் வடக்கு மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சியில், உட்கட்டமைப்பு வசதிகள் நிதி மற்றும் 15-வது நிதிக் குழு மான்யம் திட்ட நிதியின் கீழ், ரூ. 56 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் புதிய கான்கிரீட் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் கட்டும் பணிகளையும், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், பொங்கலூர் ஊராட்சியில், ரூ. 10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள மழைநீர் வடிகால் பணிகளை துவக்கி வைத்து, ரூ. 8.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பகுதி நேர நியாய விலைக் கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர், செல்வராஜ் M.L.A திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நா.சோமசுந்தரம், பெ.அசோகன், மாவட்ட துணை செயலாளர், பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் வக்கீல் குமார், பல்லடம் ஒன்றிய பெருந்தலைவர் தேன்மொழி, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Tags

Next Story