மொடக்குறிச்சியில் வளர்ச்சித் திட்டப்பணிகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மொடக்குறிச்சியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ரூ.307.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தினையும், குளூர் ஊராட்சி, தாளமடை நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.6.06 இலட்சம் மதிப்பீட்டில் குட்டை தூர்வாரி படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளதையும், குளூர் ஆதிதிராவிடர் காலனியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.7.85 இலட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு வரும் பணி என மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags

Next Story