வளர்ச்சித் திட்டப்பணிகள்- அமைச்சர் மதிவேந்தன் தொடக்கம்

ராசிபுரம் அருகே உள்ள பகுதியில் வளர்ச்சித் திட்டப்பணிகள்- அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.7.26 கோடி மதிப்பிலான பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம், நியாய விலை கடை கட்டிடம், கான்கிரீட் சாலை அமைத்தல், உணவு தானிய சேமிப்பு கட்டிடம், சுகாதார வளாகம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட குழு உறுப்பினர் துரைசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர் எம் துரைசாமி, நாராயணசாமி. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக் ராசிபுரம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.

Tags

Next Story