ரூ.36 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் - எம்.எல்.ஏ துவக்கி வைப்பு

ரூ.36 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் - எம்.எல்.ஏ துவக்கி வைப்பு
 அரசு பள்ளியில் பணிகளை துவக்கிய எம். எல். எ
கிள்ளியூர் அருகே கருங்கல் பேரூராட்சியில் ரூ.36 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.
குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கருங்கல் பேரூராட்சியில் தட்டான்விளை அரசு நடுநிலை பள்ளியில் கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர் , கக்குளம் முதல் வாய்க்கால் கரை வழியாக ஈத்தவிளை குளம் செல்லும் சாலையில் வாய்க்கால் பக்கம் கல்வெட்டு மற்றும் தேவையான இடங்களில் பக்கச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட மொத்தம் ரூ.36 லட்சம் மதிப்பிலான பணிகளை கிள்ளியூர் எம் எல் எ ராஜேஷ்குமார் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ், துணை தலைவர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் ஜெயக்குமார், ஜோபின் சிறில், ஜெஸ்டின் வினோசிங், ஆஸ்டின் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story