ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் பலத்த சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதி

ஸ்ரீ ஆண்டாள் கோவிலில்  பலத்த சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதி
சோதனை 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் சிறப்பு பெற்ற முக்கிய ஸ்தலம்மாகும். இக்கோவிலில் தான் தமிழ்நாடு அரசு முத்திரை சின்னமாக விளங்கும் இராஜகோபுரம் இடம் அமைந்துள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் தமிழக முழுவதிலும் உள்ள வழிபாட்டு ஸ்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐயப்பன் கோவிலுக்கு கேரளா செல்லும் பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்காணக்கான பக்தர்கள்கள்,பொதுமக்கள் ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசித்து செல்வார்கள். தமிழக அரசின் இலட்சிணையாக விளங்கும் ராஜகோபுரம் அமைந்துள்ள ஸ்ரீ ஆண்டாள் கோவில் மற்றும் தங்க விமானம் ராஜகோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கோவிலில் நடைபெறும் செயல்களை சிசிடிவி கேமரா மூலம் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் எந்தவித துன்புறுத்தல் இல்லாமல் தீவிர சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர்.

Tags

Next Story