சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரிக்கு செல்ல அனுமதி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் , சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் மாசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பக்தர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதியளித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறையின் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரதோஷம் மாசி பௌர்ணமி தினங்களை முன்னிட்டு இன்று (21.02.24) முதல் வரும் 24ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நீரோடை பகுதிகளில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தாணிப்பாறை அடிவாரப் பகுதிகளிலும் கோவில் வளாக பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் கழிவறை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும்,பக்தர்கள் செல்லும் மலைப்பாதைகளில் ஐந்து இடங்களில் குடிநீர் தொட்டி வசதிகளும் கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Tags

Next Story