பௌர்ணமி முன்னிட்டு கிரிவலம் வந்த பக்தர்கள்

பௌர்ணமி முன்னிட்டு கிரிவலம் வந்த பக்தர்கள்

பௌர்ணமி முன்னிட்டு கிரிவலம் வந்த பக்தர்கள் 

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள அண்ணாமலை புதூர் தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீஅண்ணாமலை ஈஸ்வரர் உடனூறை உண்ணாமலையாம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதம் தோறும் பௌர்ணமி அன்று கிரிவலம் மேற்கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் இன்று நடைபெறும் பெளர்ணமியை முன்னிட்டு கோவிலை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இதை தொடர்ந்து சாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story