ஆஞ்சநேயர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

ஆஞ்சநேயர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

ஆஞ்சநேயர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

சோளிங்கரிலுள்ள ஆஞ்சநேயர் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்த கொண்டபாளையம் யோக நரசிம்மர், யோகா ஆஞ்சநேயர் கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். தற்போது ரோப் கார் இயங்கி வருவதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள பஞ்சபாண்டவர் குளம் முறையாக பராமரிக்காமல் பிளாஸ்டிக் பாட்டில்,கவர், டம்ளர் மற்றும் மது பாட்டில்கள் குளத்தின் படிக்கட்டுகளிலும், தண்ணீரிலும் அதிக அளவு உள்ளது. இதனால் குளத்தில் இறங்கி பக்தர்கள் நீராடுவது இல்லை. எனவே பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மை செய்து முறையாக பராமரிக்க வேண்டும். குளத்தின் அருகே குப்பைத்தொட்டிகளை கோவில் நிர்வாகம் வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story