நன்செய் இடையாறு மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்தி கடன்

பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பம் நடுவிழாவுடன் தொடங்கியது. வரும் 25 ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தம் எடுத்து சென்று அம்மனை வழிபட்டனர்.தீமிதி திருவிழா அன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இன்றே உருவபொம்மை செலுத்துதல், அங்கப்பிரதட்சனம் செய்தல் மற்றும் குழந்தைகளை கரும்புத் தொட்டில் கட்டி எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

Tags

Next Story