வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் குவிந்த பக்தர்கள்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் குவிந்த பக்தர்கள்

 வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வேல் குத்தியும், பால்குடம் மற்றும் காவடி எடுத்தும் பக்தர்கள் வழிபட்டனர்.  

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வேல் குத்தியும், பால்குடம் மற்றும் காவடி எடுத்தும் பக்தர்கள் வழிபட்டனர்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வேல் குத்தி பால்குடம் காவடி எடுத்து வழிபாடு அரோகரா கோஷங்கள் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடியுடன் படையடுத்து அதிகாலை முதலே திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர் திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத் திருவிழாவினை முன்னிட்டு மதுரை, உல்ளிட்ட பலவேறு மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று பால்குடம், காவடி எடுத்து முருகப்பெருமானை தரிசிப்பதற்காக பால்குடம் சுமந்து கோவில் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடைகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது வைகாசி விசாகத் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்காண விசாகத்திருவிழா,கடந்த 13 ஆம்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது, விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகன் தெய்வானையுடன் உற்சவர் சன்னதியில் இருந்து கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்திற்கு வந்து அங்கு நீர் நிரப்ப்பட்ட தொட்டியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளுவார். வசந்த உற்சவத்தின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

விசாகத்தையொட்டி அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர்,வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணிக்கு கம்பத்தடி மண்டப்த்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் சண்முகர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினர். அங்கு காலை முதல் மதியம் 3 மணி வரை,பக்தர்கள் கொண்டுவந்த பாலில் சண்முகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் பால் காவடி,பன்னீர் காவடி,இளநீர் காவடி,புஷ்ப காவடி எடுத்தும்,அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்த பாலை குழாய் மூலம் பக்தர்களுக்கு விநியோகிக்கும் முறையை கோவில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறது. வைகாசி விசாகத்தில் முருகனைக் காண வேண்டும் என்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் சுமந்து வருகை தந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் திருப்பரங்குன்றம் சாலையில் வழி நெடுகிலும் பக்தர்களுக்காக அரசியல் கட்சியினர் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பாக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகைதருவதால் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் மற்றும் கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story