பக்தர்கள் தங்கும் விடுதி அடிக்கல் நாட்டு விழா

பக்தர்கள் தங்கும் விடுதி அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல் நாட்டுவிழா

தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காலபைரவர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க எம்எல்ஏ இன்று அடிக்கல் நாட்டினார்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டையில் அருள்மிகு காலபைரவர் சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் இடவசதி இல்லாத காரணத்தினால் பக்தர்களின் நலன் கருதி நடந்து முடிந்த 2023 - 2024 சட்டமன்ற கூட்டத் தொடரில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்களிடம் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

உடனடியாக தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் சட்டன்ற அறிவிப்பு எண்:78/2023 - 2024 இந்த கட்டிடம் கட்ட ரூ.1.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி இன்று காலை தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அடிக்கல் நாட்டி வைத்து துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள் மற்றும் அறநிலைத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story