ஜவ்வாது மலையில் பக்தர்கள் மகா தீபம் ஏற்றி வழிபாடு

ஜவ்வாது மலையில் பக்தர்கள் மகா தீபம் ஏற்றி வழிபாடு

மகா தீபம் 

திருவண்ணாமலை: ஜவ்வாது மலை உச்சியில் உள்ள பெருமாள் கோவிலில் மகா தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை உச்சியில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி மாலை 6மணிக்கு மகா தீபம் ஏற்றி வழிபட்டார்கள். மேலும் ஜவ்வாது மலை உச்சியில் உள்ள பெருமாள் கோவிலில் மகா தீபம் ஏற்றுவதை குப்பநத்தம்,புதுப்பட்டு, காந்திநகர், செங்கம்,புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மலை உச்சியில் தீபத்தை வணங்கி தரிசனம் செய்தார்கள்.

Tags

Next Story