ஓமலூரில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஓமலூர் அருகே உள்ள கோட்டை வசந்தீஸ்வரர் கோயில், பாகல்பட்டி ஈஸ்வரன் கோயில் மற்றும் ஸ்ரீ கெங்கம்மாள் கோவில்களில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கோட்டை வசந்தீஸ்வரர் கோயில், பாகல்பட்டி ஈஸ்வரன் கோயில் மற்றும் ஸ்ரீ கெங்கம்மாள் கோவில்களில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஓமலூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவனை வணங்கிச் சென்றனர்.

மேலும் இந்த சிவராத்திரி அன்று இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும் என்று ஐதீகம் இருக்கும் நிலையில் இந்த கோயில்களில் நடன நாட்டிய நிகழ்ச்சி, சுவாமி திரைப்படம் ஒளிபரப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த சிவராத்திரி விழாவில் ஓமலூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 1000க்கும் மேற்பட்ட சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Tags

Next Story