தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

தேர் 

வேலையாம்பாக்கம் பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் சுற்று வட்டார பகுதிகளில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வேலையாம்பாக்கம் பாலமுருகன் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் அலகு குத்தியும், தேர் இழுத்தும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story