பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

நேர்த்திகடன்

அம்மாபாளையம் பகுதியில் தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழாவில் இன்று ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர் .
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழாவில் இன்று ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து தீக்குழியில் இறங்கி தீமிதித்தனர். தீமிதி திருவிழாவில் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பாஞ்சாலி அம்மனை வணங்கி, தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Tags

Next Story