பங்குனி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

பங்குனி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் பங்குனி அமாவாசையை முன்னிட்டு கடந்த ஏப் 6 ஆம் தேதி முதல் நாளை வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இந்த நிலையில் இன்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை விருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை மலைப் பாதை வழியாக மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்த பக்தர்களை வனத்துறையினர் சோதனை செய்த பின்னரே பக்தர்கள் மலையேறு அனுமதித்தனர்.மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பக்தர்களுக்கு இரவில் தங்கவும் அனுமதி இல்லை சாமி தரிசனம் செய்து முடித்தவுடன் கீழிறங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story