பண்ருட்டி பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

பண்ருட்டி பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

உற்சவம் 

திருவதிகை ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோவிலில் ஆங்கில வருட பிறப்பு மற்றும் திருவாய்மொழித் திருநாள் இராப்பத்து பத்தாம் நாள் உத்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்..
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சரநாராயண பெருமாள் திருவாய்மொழித் திருநாள் இராப்பத்து பத்தாம் நாள் உத்ஸவம் மற்றும் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு மூலவர் பெரிய பெருமாளுக்கு "முத்தங்கி சேவை" இராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story