வள்ளலார் மன்றத்தில் தருமசாலை நாள் விழா
![வள்ளலார் மன்றத்தில் தருமசாலை நாள் விழா வள்ளலார் மன்றத்தில் தருமசாலை நாள் விழா](https://king24x7.com/h-upload/2024/05/28/528187-1000992052.webp)
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் தருமசாலை நாள் விழா நடந்தது.
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் தருமசாலை நாள் விழா நடந்தது.
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் தருமசாலை நாள் விழா நடந்தது. விழாவிற்கு மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். பாண்டலம் கோவில் நகர அரிமா சங்க தலைவர் ஏழுமலை, அரிமா சங்க செயலாளர் விஜயகுமார், பொருளாளர் பாலசுந்தரம், இளைஞரணி நிர்வாகி சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.
அரிமா மாவட்ட தலைவர் வேலு வரவேற்றார். தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் இளையாபிள்ளை முன்னிலையில் அகவல் படித்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மூர்த்தி சன்மார்க்க கொடி ஏற்றினார். ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், வள்ளலார் மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிறப்பு ஜோதி தரிசனத்திற்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story