LPF கொடியை ஏற்றி வைத்த தருமபுரி திமுக மாவட்ட கழக செயலாளர்

தடங்கம் ஊராட்சியில் உள்ள LPF கொடியை தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்ரமணி ஏற்றி வைத்தார்.
இன்று (01.05.2024) மே-1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட தடங்கம் ஊராட்சியில் உள்ள சரவணா ஸ்பின்னிங் மில் பகுதியில் உள்ள LPF கொடியை தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம்.சுப்ரமணி Ex.MLA ஏற்றி வைத்து இனிப்புகள் மற்றும் மோர் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் A.S.சண்முகம், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் துரைசாமி , நிர்வாகிகள் மாரியப்பன்,மாது,பெரியண்ணன்,முனுசாமி, மாதையன்,முருகன், சுப்ரமணி, ராஜா, வேலு, காவேரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story