திண்ணை பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து திமுக அறிக்கை

திண்ணை பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து திமுக அறிக்கை

திமுக திண்ணை பிரச்சாரம் 

இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் குறித்து திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள நடவடிக்கை.

தர்மபுரி திமுக மேற்கு மாவட்டசெயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் விடுத்துள்ள அறிக்கையில், “ தமிழக முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியில், 3 ஆண்டு காலத்தில் மக்களுக்கு செய்த சாதனைகளை விளக்கும் வகையில், முதல்வரின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு வாக்குச்சாவடி தோறும் வீடு, வீடாக சென்று திமுக ஆட்சியின் சாதனைகளை திண்ணை பிரசாரம் மூலம் மேற் கொள்ள வேண்டும்.

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கியும் திண்ணைபிரசாரத்தில் ஈடுபட வேண்டும். சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள், மாநில, மாவட்ட, சார்பு அணி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு இல்லந் தோறும் ஸ்டாலின் குரல் ஒலிக்கட்டும் என்ற துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்குச்சாவடி வாரியாக வீடு வீடாக சென்று மக்களை நேரில் சந்தித்து பரப்புரை செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story