தர்மபுரி சந்தையில் ரூ. 24 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

தர்மபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து ஆடுகள் வரத்து அதிகரித்ததால் விற்பனை ஜோராக நடைபெற்றது
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தப்பேட்டையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக வாரச்சந்தை நடைபெறும் இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தைக்கு சோலை கொட்டாய்,செட்டிகரை,நல்லம்பள்ளி, குள்ளனூர்,குண்டலபட்டி, நார்த்தம்பட்டி, அதியமான் கோட்டை, தடங்கம்,ஒட்டப்பட்டி, வெண்ணாம்பட்டி,பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, லளிகம் போன்ற பகுதியில் இருந்து ஆடுகளின் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இதில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 240 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2,000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 20,000 ஆயிரம் வரை விற்பனையானது. சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 24லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story