உயர் மின் கோபுர விளக்கை திறந்து வைத்த எம்.பி

காரிமங்கலம் பேரூராட்சியில் புதிய உயர்மின் கோபுர விளக்கை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம் - பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் பேரூராட்சி வார்டு எண் : 3, வியாபாரக்கொட்டாய் பகுதியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி (MPLADS) நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காரிமங்கலம் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் இல.கிருஷ்ணன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன், பேரூர் கழகச் செயலாளர் கே.வி.கே.சீனிவாசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாதப்பன், ரமேஷ், சிவக்குமார், தருமபுரி மேற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குட்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பி.என்.சி.மகேஷ்குமார், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.செல்லதுரை, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story