தர்மபுரி : ரூ. 3.21 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று நடந்த ஏலத்தில் ரூ.3.21 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட நான்கு ரோடு பகுதியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை தினந்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று 725,கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக 550 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக 267 ரூபாய்க்கும், சராசரியாக 442.81 ரூபாய்க்கும் விற்பனை யானது. மொத்தம் 3 லட்சத்து 21 ஆயிரத்து 256 ருபாய்க்கு பட்டுக் கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story