தர்மபுரி : ரூ.14 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.14.39 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் பட்டுக்கூடு விவசாயிகள் விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 2,903 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,193 கிலோவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் ரூ.503-க்கு விற்பனையான 1 கிலோ பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.12 குறைந்தது. நேற்று அதிகபட்சமாக 1 கிலோ பட்டுக்கூடு 491 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 362 ரூபாய்க்கும், சராசரியாக 450.78- ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 14 லட்சத்து 39 ஆயிரத்து 386 ரூபாய்க்கும் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது. இனிவரும் காலங்களில் பட்டுக்கூடுகளின் வர்த்தகம் அதிகரிக்கும் என பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story